• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செஸ் வீராங்கனை நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

July 31, 2017 தண்டோரா குழு

செஸ் வீராங்கனை நந்திதாவுக்கு ஐந்து லட்சம் ரூபாயை ஊக்கத் தொகை வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நந்திதா கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் பட்டம் பெற்றார்.

இதுத்தவிர ஆகஸ்டு மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

இவர் மேலும் பல சாதனைகள் செய்ய,ஊக்குவிக்குகம் வகையில்,அவரை பாராட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பி.வி.நந்திதாவுக்கு 5 ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளர்.

மேலும் படிக்க