• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்வபுரம் பகுதியில் வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது

December 1, 2021 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று மாலை கோவை மாநகர் முழுவதும் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் போயர் வீதி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை 6 மணியளவில் ராஜேஸ்வரி வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது திடீரென வீட்டில் பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் இருந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் கூட்டம் கூட்டம் கூடியது அப்பகுதி மக்கள் மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர் மேலும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க