அமெரிக்காவில் செல்ல பிராணிகளான நாய் என்ன பேசுகிறது என்பதை மனிதர்கள் பேசும் மொழியில் மாற்றக்கூடிய ஒரு புதிய கருவியை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் வாழும் Priarie Dogs, நிலத்தில் குழி தோண்டி வாழும் அணில் வகையை சேர்ந்தது. இந்த Priarie Dogs களை கொண்டு சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது, நிறங்கள் மற்றும் விலங்குகளின் வகைகளை சரியாக கண்டுபிடிக்க பிரத்தியோக சொற்களை பயன்படுத்தியது தெரிய வந்ததுள்ளது.
இந்த முறையை மையமாக கொண்டு, வீட்டின் செல்ல நாய், பூனை, உள்ளிட்ட பிராணிகளின் மொழிகளை புரிந்துக்கொண்டு, அதை மனித மொழியில் வழங்கும் கருவி ஒன்றை உருவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பணியை, அமெரிக்காவின் வட அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோன் ஸ்லோபோத்சிக்ஆப் தலைமையின் கீழ் உள்ள குழு செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த புதிய முயற்சிக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. இன்னும் 1௦ ஆண்டுகளில், இந்த கருவியை பயன்படுத்தி செல்ல பிராணிகளுடன் பேசலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு