• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்ல பிராணிகளுடன் பேசும் புதிய கருவி அறிமுகமாகிறது

July 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் செல்ல பிராணிகளான நாய் என்ன பேசுகிறது என்பதை மனிதர்கள் பேசும் மொழியில் மாற்றக்கூடிய ஒரு புதிய கருவியை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்காவில் வாழும் Priarie Dogs, நிலத்தில் குழி தோண்டி வாழும் அணில் வகையை சேர்ந்தது. இந்த Priarie Dogs களை கொண்டு சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது, நிறங்கள் மற்றும் விலங்குகளின் வகைகளை சரியாக கண்டுபிடிக்க பிரத்தியோக சொற்களை பயன்படுத்தியது தெரிய வந்ததுள்ளது.

இந்த முறையை மையமாக கொண்டு, வீட்டின் செல்ல நாய், பூனை, உள்ளிட்ட பிராணிகளின் மொழிகளை புரிந்துக்கொண்டு, அதை மனித மொழியில் வழங்கும் கருவி ஒன்றை உருவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த பணியை, அமெரிக்காவின் வட அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோன் ஸ்லோபோத்சிக்ஆப் தலைமையின் கீழ் உள்ள குழு செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த புதிய முயற்சிக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. இன்னும் 1௦ ஆண்டுகளில், இந்த கருவியை பயன்படுத்தி செல்ல பிராணிகளுடன் பேசலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க