February 7, 2019 தண்டோரா குழு
ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு நடிகர் சிவக்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர்கர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையும் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவக்குமாருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. இவர் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது. சிவாகுமார் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், தற்போது அதேபோன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயலும் ரசிகரின் செல்போனை மீண்டும் நடிகர் சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.