• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போன் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்

February 16, 2022 தண்டோரா குழு

ராமநாதபுரம் மாவட்டம் இடையன்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்(22). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்து ஒரு கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கார்த்திக் தனது நண்பர் அஜித் என்பவருடன் சிங்காந்ல்லூர் எஸ்.ஐ.எச்.எச் காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர்.பின்னர் மது அருந்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார்.

பின்னர் அவர்களிடம் செல்போனை கேட்டு மிரட்டினார். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி கார்த்திக்கை கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த கார்த்திக்கை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் செல்போன் கேட்டு தாக்கியது சரவணன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க