• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

June 28, 2018 தண்டோரா குழு

சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் சிசிடிவி கேமரா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“ஒவ்வொருவரும் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது காவல் துறையின் விருப்பம்.சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கிறது.வெளிமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை திருடிதான் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.ஈரானிய கொள்ளையர்களை ஆந்திரா வரை சென்று பிடிக்க சிசிடிவி கேமரா பெரும் பங்கு வகித்தது.சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்னை எம்.பிக்கள் தங்கள் நிதியில் இருந்து 3 கோடி தருவதாக கூறி உள்ளனர்” எனக் கூறினார்.

மேலும் படிக்க