• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளருடன் சந்திப்பு

April 10, 2018 தண்டோரா குழு

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெற்றால் வீரர்களை சிறை பிடிப்போம், மைதானத்தில் முற்றுகையிடுவோம் என்று பல்வேறு அமைப்புகள் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி துவங்க உள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கவுபாவை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா சந்தித்து பேசினார். அப்போது, ஐபிஎல் போட்டியை நடத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ் சுக்லாவிடம், உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க