• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கோவையில் கைது

October 1, 2019 தண்டோரா குழு

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 34. இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை கொலை முயற்சி கொலை மிரட்டல் ஆள் கடத்தல் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவரை என்கவுண்டர் செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார் இந்த நிலையில் போலீசார் தமிழகம் முழுவதும் ராதாகிருஷ்ணன் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து ரகசியமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவதாக சென்னை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை போலீசார் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த ராதாகிருஷ்ணனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் சிக்கிய தகவல் குறித்து சென்னை அரும்பாக்கம் போலீசாருக்கு சிங்காநல்லூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் அவர்கள் கோவைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் வந்ததும் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனை சிங்காநல்லூர் போலீசார் அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர் மேலும் தற்போது சிக்கியுள்ள பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனை போலீசார் என்கவுண்டர் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க