• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சென்னையில் இருந்து கோவை வந்த பெண்ணிற்கு கொரோனா உறுதி – அடுக்கு மாடி குடியிருப்பிற்கு சீல்

June 21, 2020 தண்டோரா குழு

சென்னையில் இருந்து இபாஸ் பெற்று கோவை வந்த தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வசித்த பீளமேடு தனியார் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை பீளமேடு துரைசாமி லே அவுட் அருகே உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இபாஸ் பெற்று கோவையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலென்ஸ் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் தனிமைபடுத்தினர்.

மேலும் பெண் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினிகள் தெளித்தனர். யாரும் வெளியே செல்லாதவாறு குடியிருப்பிற்கு சீல் வைத்தனர்.

மேலும் படிக்க