• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி விரைவில் அமைச்சராக வேண்டி கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

September 27, 2024 தண்டோரா குழு

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தேறி விரைவில் அமைச்சராகி மக்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டி கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

ஒன்றை ஆண்டுகள் சிறைவாசித்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைஅடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக வேண்டுமென்றும் மீண்டும் அமைச்சராகி மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டி கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் திமுக மாணவர் அணி முன்னாள் அமைப்பாளரும் தண்டு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினருமான மனோஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் தினேஷ்,பாலாஜி விக்னேஷ் உட்பட திமுகவினர் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாக வேண்டும் என தண்டு மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்திருந்ததாகவும் அந்த வேண்டுதல் தற்போது நிறைவேறி உள்ளதால் தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க