• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செக் குடியரசு நாட்டில் பெண்களுக்கென தனி ‘பீர்’

July 20, 2017 தண்டோரா குழு

செக் குடியரசு நாட்டில் பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக பீர் தயாரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

செக் குடியரசு நாட்டின் அவுரோசா என்னும் பீர் நிறுவனம் பெண்களுக்கான பிரத்தியேக பீர் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த பீர் பிங்க் நிறத்தில் உள்ளது. இந்த பீர் ‘ஒரு பெண்ணின் வலிமை மற்றும் மென்மையை’ பிரதிநிதித்துவம் செய்யும் என கூறப்படுகிறது.

“மது பானத்தில் பாலினம் செய்ய முயற்சி செய்யவில்லை. பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்சாலையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறோம்.

பெண்கள் என்ன குடிக்க வேண்டும் அல்லது குடிக்க கூடாது கட்டளையிட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பீரை ஒரு அழகான பாட்டிலில் வழங்க விரும்புகிறோம். இது போன்ற ஒரு முயற்சி இதற்கு முன் செய்யப்படவில்லை” என்று அவுரோசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க