• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் பகுதியில் விபத்திலிருந்து பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

November 7, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் செல்வகணேஷ் (PC-1684), அயல் பணியாக சூலூர் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், திருச்சி சாலை கலங்கல் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலில் நேற்று (05.11.2024) சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி ஒன்று எதிர்ப்பாராக விதமாக மோதி விபத்து ஏற்பட இருந்தது. அப்போது, பணியில் இருந்த காவலர் செல்வகணேஷ் அவ்விடத்தில் துரிதமாக செயல்பட்டு விபத்திலி ருந்து பள்ளி மாணவியைக் காப்பாற்றினார்.

இத்தகைய நற்செயலுக்காக தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவலர் செல்வகணேஷை அழைத்து பாராட்டி, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மேலும் படிக்க