April 24, 2019
தண்டோரா குழு
சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய மூன்றாவது நாளான இன்று இரு வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சமூக நீதிகட்சியை சார்ந்த கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து அரசூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் மொத்தம் இது வரை 5 பேர், சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.