• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மநீம தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

May 18, 2019 தண்டோரா குழு

சூலூர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியுள்ளது.

சூலூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து வருகிறது. மேலும், இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் நேற்று மாலையுடன் நிறைவு செய்தன. ஆனால், சர்ச்சைக்குரிய பேச்சில் சிக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு, சூலூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அக்கட்சியினர் பெருத்த ஏமாற்றத்துடனேயே இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இதனிடையே, சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணயத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுசெயலாளர் அருணாச்சலம் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 12-ம் தேதி வெடித்த சர்ச்சையால், சூலூரில் பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு நாளை நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மேலும், கமலின் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மே 7-ம் தேதியே மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதில் கடிதம் அதிகாரிகளிடம் இருந்து பெறவில்லை. மாறாக, வாய்மொழி உத்தரவிலேயே அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்தின் கடைசி நாளில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், சுதந்திரமான, நம்பிக்கையான தேர்தலை நடத்தவும் வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க