• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம் – இயக்குநர் பா.இரஞ்சித்

July 17, 2019 தண்டோரா குழு

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவுக்குத் துணை நிற்போம் என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள், 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்றும் விமர்சித்தார். “30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சூர்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு இயக்குநர் பா.இரஞ்சித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும் பேசியும் செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க