• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன – கோவை மாநகராட்சி ஆணையர்

September 24, 2019 தண்டோரா குழு

சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குனார் ஜடாவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெறும் நடவடிக்கைகள் கோவை மக்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. உப்பு தண்ணீர் வசதி துண்டிக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. சூயஸ் திட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் குழாய் பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே மேற்கொள்ளும். கோவை மாநகராட்சியில் ஏற்கனவே இருக்க கூடிய குடிநீர் இணைப்புகள் அப்படியே தொடரும். மாநகராட்சியின் அதிகாரத்திற்குட்பட்டே சூயசின் அனைத்து பணிகளும் தொடரும். சூயஸ் திட்டம் குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன. சூயஸ் திட்டத்திற்கான பணிகள் முதற்கட்டமாக ஆர்.எஸ் புரம் பகுதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மேலும் படிக்க