• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவிட்சர்லாந்தில் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் திறப்பு

August 2, 2017 தண்டோரா குழு

சுவிட்சர்லாந்து நாட்டில் மலைகளை இணைக்கும் உலகின் நீளமாக தொங்கும் நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜேர்மாட் மாட்டேர்ஹோர்ன் என்னும் சுவிஸ் ஆல்பைன் ரிசார்ட்டில், Charles Kuonen என்னும் உலகின் நீளமான நடை மேம்பாலம் திறப்பட்டுள்ளது. அதிக உயரங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக, 10 வாரங்களுக்குள் கட்டப்பட்ட, இந்த பாலம் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் சுமார் 494 மீட்டர் நீளமும், நிலத்திலிருந்து 85 மீட்டர் உயரமும், 65 சென்டிமீட்டர் அகலும் கொண்டது.

இதற்கு முன்பாக ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது. அந்த சாதனையை சுவிட்சர்லாந்து மேம்பாலம் முறியடித்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த நடைமேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க