• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் பையில் வைத்துருந்த செல்போன் பவர் பேங்க் வெடித்துச் சிதறியது

June 11, 2018 தண்டோரா குழு

சீனாவில் பேருந்தில் சென்ற பயணி ஒருவரது பையில் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்த சம்பவம் சி.சி.டி.வி.காட்சியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த பையில் பவர் பேங்க் மூலம் செல்போனுக்கு சார்ஜ் செய்தபடி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் சகபயணிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக திடீரென்று பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்தது, இதில், அவரது பை முழுவதும் தீப்பற்றியது உடனே பையை அந்த நபர் கீழே வீசியதால் அவர் சிறிது காயத்துடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது.

வழக்கமாக மொபைல் போன்கள் தீப்பிடிக்கும் சம்பவம் கொஞ்சம் காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பவர் பேங்க்கும் வெடித்து தீபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலயதலங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க