• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீட்டு கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விளக்கக் கோரி வேண்டுகோள்

July 13, 2022 தண்டோரா குழு

சீட்டு கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி,சீட்டு கம்பெனிகளால் பயன்பெறும் பொதுமக்களுக்கு தான் பெரும் சுமையாக அமையும் எனவும்,வரியை முழுமையாக தளர்த்த வேண்டும் என கோவை மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கத்தினர் தெரவித்துள்ளனர்.

கோவை மாவட்ட சீட்டு நிதி நிறுவன சங்கத்தின் சார்பாக கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சீட்டு கம்பெனி சங்க தலைவர் கிருஷ்ணபாரதி,மற்றும் கோவை மாவட்ட சீட்டு கம்பெனி சங்க நிர்வாகிகள் ராஜ் குமார், செல்லக்கண்ணு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, பொருளாதார சேவையை செய்து வரும் சீட்டு கம்பெனிகள் நடத்தும் சீட்டு நிதியங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை அரசு 18 சதவிகிதமாக உயர்த்தி இருப்பதால், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு முழுவதுமாக பொதுமக்களை மட்டுமே பாதிக்கும் எனவும்,வங்கிகளில் நிதி உதவி கிடைக்கப்பெறாத சிறுபான்மை மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்களுடைய தொழில் துவங்குவதற்கும் தொழிலை மேம்படுத்துவதற்கும் சீட்டு கம்பெனிகளில் சேர்ந்து தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இது போன்ற வரி உயர்வால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால்,வரி விதிப்பை , முழுவதுமாக நீக்க வேண்டும்..அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி கிடையாது..ஆனால் அவர்களின் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காது ஆகவே அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகளுக்கு இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை முழுவதுமாக தளர்த்த வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க