April 11, 2019
தண்டோரா குழு
கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.நடைபெற உள்ள தேர்தல் என்பது நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் நல்லரசாக செயல்பட்டு வருகிறது.
நல்லரசாக உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும் நாட்டின் வளர்ச்சியை மிக சிறப்பாக செயல்படுத்துகிறது.
பாதுகாப்பை உறுதிபடுத்குகிற அரசு பாஜக தலைமையிலான மத்திய அரசு.
தமிழகத்தில் எடப்பாடி ஓபிஎஸ் அனைத்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக செயல்பட்டு வருகின்றனர்.மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்து என்பது முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும்.
கவுண்டம்பாளையம் பகுதியில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்யும் அரசாக அதிமுக அரசு உள்ளது.சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அடிக்கடி மக்களைசந்திப்பவர்கள். அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை பெற்று தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.