September 14, 2019
தண்டோரா குழு
மாவட்ட ரோட்டராக்ட் சங்கத்தின் இதழாசிரிய குழுமம் சார்பில் “ஜாசி” என்னும் இதழாசிரிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கினை சி.ஐ.டி ரோட்டராக்ட் சங்கம் ஏற்று நடத்தியது.
கோவை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பங்கேற்றவர்களுக்கு கொரல் ட்ரா, பவர் டெரக்டர் மற்றும் போட்டோசாப் பயிற்றுவிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் 122 ரோட்டராக்டர்கள் பங்கேற்று பயிற்சிபெற்றனர்.இறுதியில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இக்கருத்தரங்கில் ரோட்டராக்டர் பாலாஜி, மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி ரோட்டராக்டர் அஜய், ரோட்டராக்டர் கிருபாஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.