• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.ஆர்.என்.ஐ என்ற புதிய கூட்டமைப்பு கோவையில் துவக்கம்

June 16, 2022 தண்டோரா குழு

ரியல் எஸ்டேட் அதிபர்கள்,பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் இணைக்கும் சி.ஆர்.என்.ஐ என்ற புதிய கூட்டமைப்பு கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை இணைக்கும் வகையில் சி.ஆர்.என்.ஐ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய அமைப்பின் துவக்க விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பில்டர்ஸ் வேர்ல்டு என்ற கட்டுமான துறை சார்ந்த அதிகாரப்பூர்வமான மாத இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து அதன் நிறுவனர் லிங்கராஜ் கூறும்போது,

ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், பொறியாளர்கள், அதேபோல் செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் இணையும் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கட்டுமானம் துறை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும், மேலும் ஒவ்வொருவரும் தங்களது தொழிலிலும், தாங்கள் சார்ந்த குழுவிலும் சிறந்து விளங்க இந்த கூட்டமைப்பு உதவும் என தெரிவித்தார்.

மேலும் கட்டுமானத் துறையில் முன்னணியில் உள்ளவர்களைக் கொண்டு புதிதாக கட்டுமானத் துறைக்கு வரும் முனைவோர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தனித்தனியாக குழுக்கள் துவங்கி கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு உதவும், மேலும் இதன் மூலம் சரியான விலை, தரமான பொருட்கள், விற்பனைக்கு பிந்தைய சேவை என இதன் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க