• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறை தாக்குதலில் கைதிகள் தப்பியோட்டம்

January 2, 2017 தண்டோரா குழு

பக்ரைன் நாட்டில் உள்ள ஜு சிறைச்சாலையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லபட்டார். கைதிகள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இது குறித்து பக்ரைன் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 1) கூறியதாவது:

பக்ரைன் சிறைச்சாலை தாக்குதலால் பல கைதிகள் தப்பித்துச் சென்றுவிட்டனர். எத்தனை பேர் தப்பியுள்ளனர் என்று சரியாக தெரியவில்லை. அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது.

வளைக்குடா நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பாதுகாப்பு படையை தாக்கிய குற்றத்திற்காக ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த பலர் அந்த சிறைச்சாலையில் உள்ளனர்.

மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல் சலாம் சைப் என்னும் சிறை காவலர் உயிரிழந்தார்.

சிறையில் உள்ள குற்றவாளிகளை அவர்களுடைய குடும்பத்தினர் சந்திக்கும் நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது . இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். விரைவில் தப்பிய கைதிகளை சிறையில் அடைப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க