• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைவு – தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வலியுறுத்தல்

May 11, 2019 தண்டோரா குழு

கோவையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இம்மாத இறுதி வரை மட்டுமே விநியோகிக்க இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரளாவில் இருந்தாலும் நீரை அதிகளவில் பயன்படுத்துவது கோவை தான். சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, வழியோரமுள்ள  22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாள 23 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது கோடை காலமாக உள்ளதாலும், மழை இல்லாத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 49 எம் எல் டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இருப்பு இம்மாத இறுதி வரை மட்டுமே விநியோகிக்க முடியும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

மழை பெய்தால் தான் அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் எனவும், சிறுவாணி அணையில் மழை குறைந்து நீர் பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க