• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவர் சாலை பாதுகாப்பு பூங்காவில் சாலை பாதுகாப்பு குழு தலைவர் ஆய்வு

February 13, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் சிறுவர் சாலை பாதுகாப்பு பூங்காவில்,இந்திய சாலை பாதுகாப்பு குழு தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அபை மனோகர் சாப்ரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

இப்பூங்காவானது மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சாலைப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நகரிலுள்ள சாலைகள் மற்றும் வீதிகளை எடுத்துக்காட்டாக சித்தரிக்கும் விதத்தில் உருவகப்படுத்தப்பட்ட இந்த பூங்காவில் குறிப்பிட்ட சந்திப்புகளில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சமிக்ஞைகள்,சாலை குறியீடுகள், போக்குவரத்து கண்காணிப்பு,பாதசாரிகளுக்கான நடைபாதைகள்,சாலையோர தாவரங்கள், மீன் தொட்டிகள்,எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. ப்ரொஜெக்டர்களுடன் கூடிய அரங்கம், கண்காணிப்பு கோபுரம்,சிறிய பொதுக்காட்சி கூடம் உள்ளிட்டவை நேர்த்தியாக அமைக்கப்பட்டு நிஜ சாலை அமைப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து போக்குவரத்து காவல் உதவி கமிஷனர் (கிழக்கு) அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இந்திய சாலை பாதுகாப்பு குழு தலைவர், சாலை பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுவது குறித்தும், சாலை விதிகளை மீறுவோர் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர், காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, உதவி கமிஷனர்கள் (போக்குவரத்து) சரவணன், ராஜ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க