• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

September 29, 2020 தண்டோரா குழு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டேனியல் (54).சமையல் வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.அத்திபாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ள இவர்
கடந்த ஒரு மாதமாக அத்திபாளையம் பகுதியில் உள்ள மெஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 28ம் தேதி எட்டு வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்தவர் அந்த சிறுவனை தான் தங்கியிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.இது குறித்து சிறுவன் தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.போலீசாரின் விசாரனையில் ஒரு வார காலமாக சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தது போலீசார் விசாரனையில் தெரியவந்தது.

இதனையடுத்து டேனியல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுவனை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் படிக்க