• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போஸ்கோ சட்டத்தில் கைது

September 9, 2020 தண்டோரா குழு

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் விஜயன் வயது 42.இவர் கோவை கணபதி அருகே மணிகாரம்பாளையம் நேரு நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் சோலார் கம்பெனியின் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விஜயன் வீட்டுக்கு
பக்கத்துக்கு வீட்டு 15 வயது சிறுமி
விளையாட சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கு விஜயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து கோவை புலியகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க