• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

August 26, 2020 தண்டோரா குழு

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவனைபோலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.

கோவை பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைந்தனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும் சிறுவன் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்ததாக தெரிவித்தனர்.இருவரது வீடுகளும் அருகருகே உள்ள நிலையில் சம்பவதன்று சிறுவன் சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறினர்.இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க