• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னத்தம்பி யானையை மீண்டும் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கிளம்பிய கும்கி

February 2, 2019 தண்டோரா குழு

சின்னத்தம்பி யானையை மீண்டும் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கும்கி கலீம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பெரிய தாடகம் பகுதியில் இருந்து சின்னதம்பி என்ற காட்டு யானையை வனத்துறையினர் கடந்த 25ம் தேதி பிடித்தனர். பின்னர் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சின்னத்தம்பி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பொள்ளாச்சி பகுதியில் சுற்றி வந்த இந்த யானை தற்போது உடுமைலையை சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வருகிறது. இதனையடுத்து, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றவுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இதையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி யானை சென்றது. அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை சோர்வில் தரையில் படுத்தது. இதனால் யானை மயக்கம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் யானை நடக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில். உடுமலை அருகே மைவாடி பகுதியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டியுள்ளனர். இதற்காக டாப்சிலிப்பில் இருந்து கும்கி கலீம் வரவழைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க