• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு

March 9, 2022 தண்டோரா குழு

தனியார் டிரஸ்ட் நிறுவனம் கோவை மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் கோவை சின்னதடாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளது.

இப்பள்ளியில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதிமூலமாக அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த 520 மாணவிகளுக்கு விளையாட்டு வசதிகள் அளிக்கப்படும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வருவது போன்ற நோக்கங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தபடும். இந்த ஆண்டு ஒரு கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கபடி ஆடுகளம் மற்றும் செயல்பாடுகளுக்கான அரங்கம் ஆகியவை உருவாக்கப்படும்.

வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.இதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தனியார் டிரஸ்ட் அறங்காவலர் கையெழுத்திட்டு அதனை மாவட்ட
ஆட்சியர் சமீரனிடம் வழங்கினார்.

மேலும் படிக்க