• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிட்பண்ட்டில் கட்டிய பணத்தை திருப்பி தராததால் பயனாளிகள் திடீர் சாலை மறியல்

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் சிட்பண்ட்டில் கட்டிய பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த பயனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை 100 அடி சாலையில் உள்ளது தோட்டத்தில் சிட்பண்ட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பயனாளிகள் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு பயனாளியும் கட்டிய பணத்தில் பாதியை மட்டுமே கணக்காக பதிவு செய்து மீதி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தரக் கோரி பல மாதங்களாக பயனாளிகள் கேட்டு வந்தாலும் பணத்தை திருப்பித் தருவதாக தொடர்ந்து கூறி வந்த சிட் பண்ட் நிறுவனம் இதுவரை யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து கோவை பி3 காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பாபுவை இதுவரை காவல்துறை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுவரை பயனாளிகள் அனைவரிடமிருந்தும் பெற்ற பணத்தில் 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்த நிறுவனத்தால் ஆத்திரமடைந்த பயனாளிகள் கோவை 100 அடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்திபுரம் காவல்துறையினர் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பயனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் பணத்தை திருப்பி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப நாட்களாக சிட் பண்ட் மோசடி விவகாரம் கோவையில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க