• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்பாபா காலனி கனரா வங்கி மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி வழங்கல்

February 12, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலனியில் உள்ள கனரா வங்கி கிளையின் மூலம்குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கனரா வங்கியின் கோவை மண்டல உதவி பொதுமேலாளர் ரமேஷ் முதல் கட்டமாக 10 தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குறுந்தொழில் முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தில் கடன் வழங்கிட உதவி செய்த கிளை மேலாளர்க்கும், மண்டல துணை பொது மேலாளர்க்கும் டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.

பின்னர் டாக்ட் மாவட்ட தலைவர் பேசுகையில்,

‘‘கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள், கொரோனா காலம் துவங்கி இன்று வரை கடும் நெருக்கடியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மாவட்ட கலெக்டர் மூலம் 410 கடன் கோரும் விண்ணப்பம் கொடுத்ததில், சாய்பாபா காலணி கனரா வங்கி கிளையின் மூலம் மட்டும் 10 தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 20 லட்சம் வரை முத்திரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது. இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளும் குறுந்தொழில்
முனைவோர்களுக்கு முத்திரா கடன் திட்டத்தின் கீழ் முதலீட்டு கடன் வழங்கிட வேண்டும்,‘‘ என்றார்.

மேலும் படிக்க