• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாய்ந்து விழும் நிலையில் இருந்த 5 மின் கம்பங்கள் உடனடியாக மாற்றம்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட கருப்பண்ண கவுண்டர் லேஅவுட், செங்காளியப்பன் நகர் பகுதிகளில் ஐந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு மின் கம்பத்துடன் புகைப்படம் மற்றும் சீரமைத்து தர கோரிக்கை கடிதம் கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரியால் வழங்கப்பட்டது.

இதனிடையே கோரிக்கை விடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புதிய மின் கம்பங்களை மின்சார ஊழியர்கள் மாற்றி கொடுத்துள்ளனர். பீளமேடு தண்ணீர் பந்தல் மின்சாரத் துறையைச் சார்ந்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க