• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாமியானா பந்தல் உரிமையாளர் வீட்டில் திருடியவர் சிக்கினார்

February 11, 2022 தண்டோரா குழு

கோவை அருகே சாமியானா பந்தல் உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர்
பைக்கை விட்டு சென்றதால் சிக்கினார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்து சிறுமுகை சத்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (57).இவர் வீட்டின் முன்பு சாமியானா பந்தல் வாடகைக்கு விடும் கடை வைத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.அப்போது, அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் புகுந்தார்.அந்த மர்ம நபர் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் அங்கிருந்த செல்போனை திருடி கொண்டு வெளியே சென்றார்.

கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு பழனிசாமியின் மனைவி எழுந்து பார்த்தார்.அங்கு அந்த மர்ம நபர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.அவரின் சத்தத்தைக் கேட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.இதுகுறித்து பழனிசாமி சிறுமுகை போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது, பழனிசாமி வீட்டின் முன்பு ஒரு பைக் நின்றிருந்தது. அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பைக் சிறுமுகை கெம்பே கவுண்டர் வீதியை சேர்ந்த ரமேஷ் (29) என்பவரது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரமேஷின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் பழனிசாமியின் வீட்டுக்கு சென்று திருடியதும், பழனிசாமியின் மனைவி சத்தம் போட்டதால் பைக்கை அங்கேயே விட்டு விட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க