• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் சிறப்பு தனிப்பிரிவு தொடக்கம்

August 7, 2017 தண்டோரா குழு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் சிறப்பு தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தனிப்பிரிவு செயல்படும்.

கலப்பு திருமணம் செய்தவர்களை அச்சுறுத்தல், பயமுறுத்தல்,தீங்கு விளைவித்தல் கவுரவ கொலைகள் உள்ளிட்ட அவலங்களிலிருந்து பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்திரவுப்படி இந்த சிறப்பு பிரிவு மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கலப்பு திருமணம் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர்கள் 0452 – 234602 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கலப்பு திருமணம் செய்தவர்களின் புகார்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு விசாரிக்கும். மதுரை மாவட்ட நலத்துறை அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, மாநகர துணை ஆணையர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்பிரிவு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க