• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதனைக்கு ஓர் அங்கீகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக காலண்டர் !

December 21, 2018 -ச.ச.சிவசங்கர்

பொதுவாக சாதனைகளுக்கு உருவமோ, கட்டமைப்போ கிடையாது, சாதனைகள் பல பரிமாணங்களில் நிறைந்திருக்கிறது. இது சாதனையாளர்களுக்கும் பொருந்தும், உலகம் முழுவதும் படைப்புகளும், படைப்பாளிகளும் மனித வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளனர். இன்றளவும் உலகில் பல ஸ்வாரசியங்களை நாள்தோறும் காண்கிறோம். அதில் பெண்களின் செயல்பாடுகளும், சாதனைகளும் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கை மனிதர்களிடம் பேதம் வைக்கவில்லை ஆனால் நம் சமூகம் சில கட்டமைப்புகளால் பெண்களுக்கு இருந்த நெருக்கடிகளின் நிமித்தமாக அவர்களின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெருகிறது. இது ஒரு புறமிருக்க இச்சமூகம் மாற்றுத்திறனாளிகளின் செயல்பாடுகளை எந்த அளவிற்கு கருத்தில் கொண்டுள்ளது. அவர்களுக்கான அங்கீகாரம் என்பது சொற்பம் தான். அதிலும் அவர்களிடம் காட்டும் அனுதாபங்களே பெரும்பாலும் தன் திறமைகளையும் ஆசைகளையும் வெளிக்கொண்டு வர முடியாமல் போகிறது. இது
போன்ற பல தடைகளை உடைத்து கொண்டிருக்கிறார் ஸ்வர்ணலதா (29).

இவர் பெங்களூரைச் சேர்ந்தவர், 2009ல் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு அவரை இயல்பு வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை சக்கர நாற்காலியில் தனது பயணத்தை தொடங்கியவர் 2004ல் ஸ்வர்கா பவுண்டேசனை நிறுவினார். இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து வருகிறார்.இவர் ஆண்டுதோறும் தனது சொந்த தயாரிப்பில் காலண்டர் ஒன்றை தயாரித்து வருகிறார். அதில் மாற்றுத்திறனாளின் புகைப்படத்தையும் அவர்களில் சாதனைகளை பற்றிய தகவல்களுடன் வெளியிட்டு வருகிறார். இந்திய அளவில் இது போன்ற காலண்டர்களை வெளியிட்டது இவர் தான். இதன் மூலம் வரும் தொகையை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை செய்து வருகிறார்.

இது பற்றி அவரிடம் கேட்டோம்:

”இந்த சமூகத்துல பெண்களுக்கான அங்கீகராமே ஓரளவுக்கு தான் கிடைக்குது. இதுல மாற்றுதிறனாளிகள்னா உன்னால என்ன செய்ய முடியும், எப்படி இது எல்லாம் நீ பன்னுவ, அப்படிபட்ட கேள்விகள் தான் வரும். அந்த என்னத்த முதல ஒழிக்கனும் அதுக்காக தான் மாற்றுத்திறனாளி பெண்கள் அதுவும் இந்திய மட்டும் இல்ல உலகம் முழுவதும் இப்படி பாதிக்கப்பட்டு சாதனை செய்யுற பெண்கள காலண்டர்ல கொண்டு வந்தோம். ஒரு முறை பாரா ஒலிம்பிக் போட்டியில வெற்றி பெற்றவங்கள காலண்டர்ல போட்டோம். அதுபோக எல்லா மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேக வீல் சேர், ஃபிஸியோதெரபி சென்டர் ஆரம்பிச்சுருக்கோம். இன்னும் இந்த பயணம் தொரும்” என்கிறார் ஸ்வர்ணலதா.

மேலும் படிக்க