• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

January 3, 2019 தண்டோரா குழு

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரபல உணவகங்களுலான சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய ஓட்டல்களில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன. இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறையினர் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் இந்த உணவகங்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க