சமூக இடைவெளியை பின்பற்றாமல் வேலைக்கு ஆட்களை எடுத்த தனியார் நிறுவனம் அரசு அதிகாரிகளால் மூடப்பட்டது.
கோவை கணபதி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் (எம் இந்தியா ஆன்லைன் டெவலப்பர்ஸ்) நிறுவன வேலைக்கு ஆட்களை தேவை என்றும் நேர்முக தேர்வு உள்ளது என்றும் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக கோவையில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்விற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் தேர்வு நடத்தப்பட்டதென வடக்கு வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நெரில் சென்ற வட்டாட்சியர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் உடனடியாக நேர்முக தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் அங்குள்ளவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டார். அதன் பின் அந்த நிறுவனம் மூடபட்டு நோட்டிஸ் ஒட்டபட்டது. ஊரடங்கு நேரத்தில் இது போன்று நிறுவனங்கள் ஆட்களை அழைத்து நேர்முக தேர்வு நடத்த கூடாது என்றும் வட்டாட்சியர் கூறினார்.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு