• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலையை ஒழிக்கனும், பக்தர்கள் வரக்கூடாது என கேரள அரசு நினைக்கிறது – பொன்.ராதாகிருஷ்ணன்

November 22, 2018 தண்டோரா குழு

சபரிமலையை ஒழிக்கனும், பக்தர்கள் வரக்கூடாது என கேரள அரசு நினைக்கிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் நாடு முழுவதிலும் உள்ள 129 மாவட்டங்களில் நகர எரிவாயூ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் குழாய்களின் மூலம் எரிவாயு செய்யப்பட உள்ளது. சேலம், கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், கோவை கொடிசியா அரங்கில் அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நேற்று நிலக்கல் பகுதிக்கு போகும்போது வெருச்சோடி இருந்தது, பக்தர்கள் இல்லை, மற்ற பேருந்துகளை அனுமதிக்கவில்லை. நிலச்சரிவு, சாலை சரியில்லை என என பயணம் மறுக்கப்பட்டது. அரசு பேருந்து மட்டும் சென்றது. அப்போது அங்கு வந்த எஸ்.பி.யிடம், எனக்கு தெரிந்து அவ்வாறு இல்லை என்றேன். அதற்கு ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் பார்ப்பீர்களா என்று என்னிடம் கேட்டார். அந்த சட்டம் ஒழுங்கு மாநில விவகாரத்தை சார்ந்தது. அப்போது, எஸ்.பி.யின் உடல் மொழி வேறு விதமாக இருந்தது.

சபரிமலை யுத்தகளம் போலும் மட்டகரமாகவும் இருந்தது. காலணியோடு யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் இப்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. கோவிலை அழிப்பதற்கான மாஸ்டர் பிளான் இது. மன்னிப்புடன் கேட்டுக்கொள்கிறேன், சபரிமலை திருக்கோயில் தற்போது இலவு வீடு போல் காட்சி அளிக்கிறது. நேற்று நடந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக யோசித்து முடிவு செய்ய இருக்கிறேன்.

மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பைப் லைன் மூலம் எரிவாயு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி பாதிப்பு இருந்தால் அதை நிவர்த்தி செய்து கொண்டு வரப்படும்.

சாமியே சரணம் ஐயப்பா என்கிற கோஷம் சொல்லக்கூடாது, நிலை மாறிவிட்டது, இது கோவிலின் வளர்ச்சிக்கு உகந்ததா? ஐயப்பன் அரசுக்கு சொந்தமில்லை, மக்களுக்கு சொந்தம். சபரிமலையை ஒழிக்கனும், பக்தர்கள் வரக்கூடாது என அரசு நினைக்கிறது. எனக்கு இந்த நிலை என்றால், நாளை மக்களின் நிலை என்ன?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றிருந்தேன். இது சாதாரண பாதிப்பில்லை, மிகப்பெரிய பாதிப்பு. சில அரசியல் கட்சிகள் இதில் அரசியல் லாபம் பார்க்கின்றனர். மின் துறையை சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர், அப்போது ஆர்பாட்டம் செய்தால் யாருக்கும் நஷ்டம். மக்களிடம் வாக்கு இருக்கிறது, அதில் செய்யுங்கள், பணியை தடுக்காதீர்கள் என்றார்.

கடைசியாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நான் நடந்து தான் சென்றேன். அது தான் முறை என்றார்.

மேலும் படிக்க