• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் காவல்துறையினரால் கைது

June 5, 2020 தண்டோரா குழு

திமுகவினர் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதாக குற்றம்சாட்டி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தூண்டுதலால் திமுகவினர் மீது இதுபோன்ற பொய்வழக்குகள் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனிமனித இடைவெளி விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க