• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

August 24, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், முதல்வர் பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்களை விலை பேச வாய்ப்புள்ளது. 19 எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு அளித்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மு.க.ஸ்டாலின் கடிதம் மீதம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க