• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சச்சின் டெண்டுல்கரின் முதல் காரை பெற்று தந்த ஸ்பின்னியின் “கோ பார்” பிரசாரம் துவக்கம்

August 31, 2022 தண்டோரா குழு

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க, விற்க முன்னணி முழுமையான தளமாக விளங்கும் ஸ்பின்னி, “கோ பார்” என்ற புதிய பிரசாரத்தை துவக்கிள்ளது.

இதன் முதலீட்டாளரும் பிராண்ட் தூதுவராக உள்ள சச்சின் டெண்டுல்கர், இதில் பங்கேற்கிறார்.பெரியதாக கனவு காண்; அதை செயல்படுத்து என்ற தொடராக பிரபல திரைப்பட நட்சத்திரங்களும் இதில் உள்ளனர்.

இந்த பிரசாரத்தின்போது, பல்வேறு மக்கள் தங்களது எல்லை கடந்த அன்பையும், கனவையும்,தங்களையும் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆராயப்போகிறது.வெற்றி பெற்றவர்கள் தங்களை மீண்டும் உள்நோக்கி பயணம் செய்து திரும்பி பார்க்கின்றனர். தங்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் ஆணிவேராக இருந்தவர்களையும் அறிகின்றனர். இந்த பயணத்தின் முதல்கட்டமாக முதல் கார் 800 ஐ சச்சின் ஓட்டுவதுதான்.

“சில ஆண்டுகளுக்கு முன்னாள் சச்சின் அவரது முதல் காரை கண்டுபிடித்து மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்தார். “எனது முதல் கார் 800, தற்போது அது என்னிடம் இல்லை. அந்த காரை மீண்டும் நான் பெற வேண்டும் என விரும்பினேன். மக்கள் என்னை கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். என்னை தொடர்பு கொள்ள தயக்கம் வேண்டாம். என்னுடன் தொடர்பில் இருங்கள்,” என்றார் சச்சின்.

தற்போது, 800 பேயர் நீலம், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஸ்பின்னியின் ஒருங்கிணைந்த தர மையத்தில் உள்ளது. அதை இந்த திட்ட முதலீட்டாளர் சச்சின் பார்த்து விட்டார். அவரது பழைமையான நினைவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

கோ பார் பிரசாரமானது, தனிப்பட்டது, உறவுகளை கொண்டது. பல்வேறு சிறப்பம்சம் கொண்ட மக்களை கொண்டது. அவர்களது கதை, ஒரு வசதியான நிலைக்கு அவர்கள் விரும்பிய வகையில் எப்படி உயர்ந்துள்ளோம் என்பது தான். அவர்களது குடும்பம், புதிய காரையோ, வீட்டினையோ கொண்டாடுவது அல்லது வயதான தம்பதியர்களின்புறக்கணிக்கப்பட்ட நீண்ட நாள் கனவின் புறக்கணிப்பு போன்ற எல்லகளை கடக்கச் செய்வது தான் இந்த பயணத்தின் நோக்கம்.

ஸ்பின்னி நிறுவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிராஜ் சிங் பேசுகையில்,

“வாழ்க்கை மற்றும் உங்களது வாய்ப்புகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்கள் வாங்க நினைக்கும் கார் உங்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஸ்பின்னி, அனைத்து வகையிலும் ஸ்பின்னி உங்களுக்காக செயல்பட்டு அந்த விருப்பத்தை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நிறைவேற்றி தருகிறது. இதில், சச்சின் டெண்டுல்கரும் அடக்கம். அவரது முதல் அவரை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. அதை ஸ்பின்னி உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஒரு கார், ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்துவமிக்க சிறப்பான வாங்கும் பொருள். வாடிக்கையாளர்கள் அதை பெற அதிக கவனம் செலுத்தி பெற வைக்கிறது,” என்றார்.

இந்த பிரசாரத்தில் தனது ஈடுபாடு குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில்,

“எனக்கு கார் என்பது ஒரு பயணத்துக்கான தேவை. இரண்டாவது வீடு போன்றது. என்னுடன் பயணிப்பவர்கள், வாழ்க்கைக்கும், இடங்களுக்கும் செல்பவர்கள். எங்களது கார் இதை பிரதிபலிக்கிறது. சில சமயம், அது ஆளுமையையும் அளிக்கிறது. ஸ்பின்னியின் அணியினர் எனது முதல் காரை மறுபடியும் உருவாக்கியது சிறப்பானது. இந்த அணியினர், முதல் காரை மீண்டும் கொண்டுவர அளவற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஸ்பின்னி, காருக்கு பின்னணியில் உள்ள உணர்வுகளை மதிக்கிறது. நம்பிக்கையின் மதிப்பையும், வெளிப்படத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டது,” என்றார்.

மேலும் படிக்க