• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவைச் சந்தித்த 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

August 3, 2017 தண்டோரா குழு

சிறையில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில், முதலமைச்சர் பழனிசாமி உட்பட 4 அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைகனி மகனும் அதிமுகவை சேர்ந்தவருமான அன்பழகன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிக்கலாவை அமைச்சர்கள் செங்கோட்டையன்,தமிழக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன்,காமராஜ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை கேட்டனர்.இது ரகசிய காப்பு பிரதானத்திற்கு எதிரானது. ஆகையால் அவர்களையும் அவர்களை கண்டிக்காத முதல்வரையும் தகுதி இழப்பு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு விளக்கம் அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 4 அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க