• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க – சு.சாமி

August 12, 2017 தண்டோரா குழு

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காங்கிரஸ்காரர்கள் தான் ஊழல் செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி விரைவில் சிறைக்கு செல்வார்கள்.காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சிறையில் தான் நடைபெறும் என்றார்.

அப்போது அதிமுக அணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது,

சசிகலா தலைமையிலானவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க. அதிமுகவுக்கு தலைமை சசிகலாதான்.அதிமுக கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தவறு செய்து விட்டது.இது தொடர்பான விஷயத்தில் சில நிமிடங்களில் எடுக்க வேண்டிய முடிவை வாதாடி பெற சரியான ஆள் இல்லை என்றார்.

மேலும், திமுக துணிச்சல் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரட்டும் என்றும் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும் படிக்க