• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்க இலக்கிய தமிழ் சொற்களின் பொருள் மற்றும் எதிர் சொற்களை வேகமாக கூறி மாணவன் சாதனை

January 26, 2022 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன், 200 சங்க இலக்கிய தமிழ் சொற்களின் பொருள் மற்றும் எதிர் சொற்களை வேகமாக கூறி சாதனை புரிந்துள்ளார்.

கோவை, செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் இளைய மகன் பிரித்திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் இவரது அரிய திறமையைக் கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத்யேக பயிற்சியால், பல்வேறு சாதனைகளை இவர் செய்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் புதிய சாதனையாக 200 சங்க இலக்கிய தமிழ் சொற்களின் எதிர் சொல் மற்றும் அதன் பொருளை வேகமாக கூறி சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து மாணவரின் தாயார் சங்கீதா கூறுகையில்,

பிரித்திவ் இரு கைகளால் எழுதுவது ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலை கீழாக எழுதுவது என பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், தற்போது குடியரசு தினத்தில் இந்த சாதனையை செய்வதற்காக கடுமையாக பயிற்சி செய்து இந்த சாதனையை செய்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவன் பிரித்திவின் சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் கலை பண்பாட்டு துறை தீர்ப்பாளர் சிவ முருகன் மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க