• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

April 6, 2019 தண்டோரா குழு

போத்தனூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேரை போஸ்கோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 9 வயது மகள் பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60) பள்ளி மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனை சிறுமி அம்மாவிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகார் அடிப்படையில் புளியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்யப்பட்ட மூன்று பள்ளி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். செல்வராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க