• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 80வது வார்டில் தனி நபராக மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டிய நபர்!

October 20, 2023 தண்டோரா குழு

மழை நீர் சேகரிப்பு என்பது நாளைய உலகிற்கு மிகவும் தேவையானது. மழைநீர் உயிர் நீர் ஒவ்வொரு நாளும் நீரின் தேவை அதிகரித்து வருகிறது.ஆகையால் நீரினை சேகரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும்,பல்வேறு தனியார் அமைப்புகளும், தனி நபர்களும் தங்கள் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,கோவை மாநகராட்சிக்குப்பட்ட 80வது வட்டத்தில் வசிக்கும் ச.இராம கிருஷ்ணன் என்பவர் பாலாஜி ஆவின்யூ பார்க்கில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பணியை தனது சொந்த முயற்சியில் மாநகராட்சி யின் அனுமதியுடன் இதனை அமைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

முதலில் 11அடி நிலத்தினை தோண்டி அதில் சிமெண்டு உறைகள் இறக்கி முதல் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அதன்பின் ஒரு அடுக்கு கருங்கற்களால் நிரப்பப்பட்டு
அதில் ஜல்லியிட்டு நிரப்ப வேண்டும்.அதற்கு பிறகு செங்கல்தூள் போட வேண்டும். அதற்கு மேலே கரித்தூள் போட வேண்டும். இவை அனைத்தும் செய்யும் போது நீர் நன்னிராகி பூமியில் சேர்ந்து பூமியின் நீர் மட்டத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த கட்டமைப்பிற்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலவானது.இந்த பணியை அனைத்தும் மாநகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவித்து அதற்கு ஒப்புதல் பெற்றுள்ளேன் என்றார்.

மேலும் படிக்க