February 26, 2019
தண்டோரா குழு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ,வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தேசிய வேளாண்மை அறிவியல் கலைகழகத்தின் அறிவியலாளர் கீர்த்தி சிங் கலந்து கொண்டார். இவ்விழாவில் 1006 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு,
உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நூறு லட்சம் ஹெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்து சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தார்.