• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலைய விரிவாக்கம்:இழப்பீடு தரவில்லை துண்டு பிரச்சுரம் வழங்கிய இருவர் கைது

July 3, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு தரவில்லை என துண்டு பிரச்சுரம் வழங்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை என ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையான இழப்பீட்டினை அரசு வழங்கவில்லை எனவும்,இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரி துண்டு பிரச்சுரம் வழங்கிய இருகூரை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெயப்பிரகாஷ்,அமமுக உறுப்பினர் செந்தில்ராஜ் ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிமுகவை சேர்ந்த தேவராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில்,அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியது,மக்களை தூண்டிவிட்டது ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் இருவரையும் வருகின்ற 17 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

மேலும்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துண்டுதலின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,பாரபட்சமான முறையில் இழப்பீடு வழங்காமல் முறையாக இழப்பீடு வழங்க கோரியதற்காக கைது செய்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஜெரபிரகாஷின் மனைவி வைரமணி தெரிவித்தார்.இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க