• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் பிரமுகரிடம் அதிகாரிகள் விசாரணை

January 4, 2022 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி துப்பாக்கி எடுத்துவந்த கேரள மாநில காங்கிரஸ் பிரமுகரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி முனிசிபல் முன்னாள் சேர்மனாகவும் இருந்த கே‌.எஸ்.பி.ஏ தங்கல் பெங்களூரு வழியாக அமிர்தரஸ் செல்ல கோவை விமானம் நிலையம் வந்துள்ளார். வழக்கமான உடமைகளை பரிசோதித்தபோது ஏழு ரவுண்டு புல்லட்டுகளுடன் ஒரு துப்பாக்கி பிடிபட்டது.

துப்பாக்கி மற்றும் புல்லட்டுகளை எடுத்துச் செல்ல அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க